2018 மார்ச் 7 ந் திகதியன்று இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போன ஆட்கள் எல்லோரையும் பாதுகாப்பதற் கான சர்வதேச மாநாடுக்கு பயனுள்ளது.
இது 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் திருத்தமாகும். வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்ட மோதலின் விளைவாக காணாமல் போனதாகக் கூறப்படும் ஆட்களை பதிவு செய்வதற்கு; அரசியல் அமைதியின்மை அல்லது கட்டாயமாக காணாமல் போன ஆட்கள், அல்லது ஆயுதப்படைகள் அல்லது காவல்துறையின் உறுப்பினர்கள் காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்ட வர்களைப் பதிவு செய்வதற்கான சட்டம் இதுவாகும். இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு நபர் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக இல்லாமை பற்றிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இழப்பீடு பெறுவதற்கான தகுதியுள்ள நபர்களை அடையாளம் காணவும், கூட்டு இழப்பீடுகளை வழங்கவும் இழப்பீட்டு க்கான அலுவலகத்தை நிறுவுவதற்கும் இந்த சட்டம் வழி வகுக்கிறது.